ஆன்மீகம்
Jun 13, 2023
பாலைவனத்தில்_பயணம் செய்து_கொண்டிருந்தான் ஒருவன்*
*குடிக்க கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது*
*அவன் போக வேண்டிய தூரமோ அதிகம்*
*குடிக்கத் தண்ணீர் இல்லாமல*
*அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான்*
*தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது*
*மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்*
*அங்கே ஆட்கள் யாரும் இல்லை*
*ஒரு கையால் அடித்து இயக்கும்*
*அடி பம்பும்*
*அருகே ஒரு ஜக்கில், தண்ணீரும் இருந்தன*
*ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள*
*ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும்*
*குடித்து விட்டு*
*மறுபடியும் ஜக்கில்*
*தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்*
*அந்தப் பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது*
*அந்தத் தண்ணீர் ஊற்றினால்*
*அது இயங்குமா*
*தண்ணீர் வருமா*
*என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது*
*அது இயங்கா விட்டால்*
*அந்தத் கொஞ்சத் தண்ணீரும் வீணாகி விடும்*
*அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால்*
*தாகமும் தணியும்*
*உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது*
*அந்தப் பயணி யோசித்தான்*
*தண்ணீரைக் குடித்து விடுவதே*
*புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது*
*ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல்*
*அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து*
*அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் நான் குடித்து விட்டால்*
*அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது*
*இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு*
*எந்த பயனும் இல்லாமல் போக*
*தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.....!!*
*அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை*
*ஆனது ஆகட்டும் என்று......*
*அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு*
*அதை அடித்து இயக்க ஆரம்பித்தான்*
*தண்ணீர் வர ஆரம்பித்தது....!!*
*தாகம் தீர*
*வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு*
*தான் பயணத்திற்காக கொண்டு வந்த குடுவையில் சேகரித்து கொண்டான்*
*அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில்*
*அவன் மனம் நிறைந்திருந்தத*
*நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை*
*பிறருக்கும்*
*அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும்*
*எந்த ஒரு நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது*
*அடுத்தவர் எக்கேடு கெட்டால்* *நமக்கென்ன*
*என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது*
*யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்*
*என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால்*
*இந்த உலகம்* *என்றும்* *இன்பமயமாகி விடும்"....!!!*